1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. why viay not coming out when sop is no there

இப்பதான் SOP இல்லையே!.. வெளியே வாங்க!.. விஜயை கலாய்க்கும் நெட்டிசன்கள்!..

vijay
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் சட்டமன்ற தேர்தலை விரைவில் சந்திக்கவிருக்கிறது. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னமும் தவெக  எத்தனை தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என அறிவிக்கப்படவில்லை. ஒருபக்கம் தவெக பொது கூட்டங்களில் கலந்துகொள்ளும் விஜய் 20 நிமிடம் ஆவேசமாக பேசிவிட்டு ஆஃலைன் மோடுக்கு போய்விடுகிறார் என்கிற விமர்சனமும் விஜய் மீது இருக்கிறது..

மக்களை சந்திக்கவிடாமல் திமுக என்னை தடுக்கிறது. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் SOP மூலம் முடக்க பார்க்கிறது என்றெல்லாம் விஜய் குற்றம் சாட்டினார்.  தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் திமுக மற்றும் காவல்துறை கட்டுப்பாடு எதுவும் இருக்காது. அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுகள் வந்துவிடும். விஜய் மாநில முழுவதும் பரப்பரை செய்வார்.. ஒவ்வொரு தெருவுக்கும் அவர் செல்வார்’ என ஆதவ் அர்ஜுனா பேசினார்.

ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு அறிவித்து ஒரு வாரம் ஆகிவிட்டது.. ஆனால் விஜய் இதுவரை வெளியே வரவில்லை. பிரச்சாரத்தையும் துவங்கவில்லை. தற்போது எல்லா கட்டுப்பாடுகளும் தேர்தல் ஆணையத்திடம்தான் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் ‘மக்களை சந்திக்கவிடாமல் திமுக அரசு கட்டப்படுகிறது என பேசிய விஜய் தற்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?’ என்று திமுகவினரும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரு மணி நேரத்தில் 12 லட்சம் கோடி இழப்பு!.. இந்திய பங்குச்சந்தையில் சரிவு..