1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. os manian talk about adhav arjuna

அதிமுகவில் பதவி கேட்டவர்தான் ஆதவ் அர்ஜுனா!.. பழசெல்லாம் மறந்துபோச்சா!.. ஓ.எஸ்.மணியன் பேட்டி!..

adhav arjuna
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை இணைய வேண்டும் என முதல்வர் விஜய் விரும்புகிறார்’ என்று கூறினார்..

மேலும் சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் ஆதரவு தந்தது பற்றி கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜுனா ‘தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் எண்ணத்திற்கு மாறாக திமுகவின் ஆதரவோடு ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார். திமுகவும் கொள்கை மறந்து அதிமுகவுக்கு துணை நின்றது. முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவரும் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை..

ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதிமுக உள்ளே வந்தால் பாஜகவும் அதனுடைய வந்துவிடும் என்பதற்காகவும் கம்னிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக நின்றன.  எடப்பாடி பழனிச்சாமி பின்புற வாசல் வழியாக முதலமைச்சராக முயற்சி செய்தார்’ என்றெல்லாம் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் ‘ஆதவ் அர்ஜுனா திமுக அதிமுகவை தொடர்பு படுத்தி அவதூறான செய்திகளை சொல்லி வருகிறார். ஆதவ் சொன்னதில் உண்மையில்லை. அவரது அரசியல் பயணத்தை பின்னோக்கி பார்க்க வேண்டும்..

திமுகவில் இருந்தார்.. விசிகவில் போய் சேர்ந்தார். அதிமுகவில் இணைவதற்காக எடப்பாடி பழனிச்சாமிடம் பேசி துணைப் பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார்’ என கூறியிருக்கிறார்.