1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Why siddharth not tweeted about Delhi maharastra CMs

டெல்லி, மகாராஷ்டிரா முதல்வர்களை சித்தார்த் விமர்சிக்காதது ஏன்? நெட்டிசன்கள் கேள்வி

சித்தார்த்
நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டரில் பொய் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் என உபி முதல்வரை குறிப்பிட்டுக் கூறிய டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்ற உபி முதல்வரின் கருத்துக்கு தான் சித்தார்த் இந்த ட்விட்டை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உபி முதல்வரை கன்னத்தில் அறைவேன் என்று குறிப்பிடும் சித்தார்த் உபியை விட டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அந்த மாநில முதல்வர்களை விமர்சனம் செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்
 
முதல்வரை விமர்சனம் செய்வது சித்தார்த்தின் கருத்து சுதந்திரம் என்றால் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்களை விமர்சனம் செய்யாமல் உபி முதல்வரை மட்டுமே விமர்சனம் செய்கிறவர் என்றால் சித்தார்த் செய்வது பாஜக மீதான வெறுப்பு மட்டுமே என்பது தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு சித்தார்த் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 7 பேர் உயிரிழப்பு! – சுகாதார அமைச்சர் பதவி நீக்கம்!