அதிமுக தலைமை குறித்து MGR உயிலில் குறிப்பிட்டது என்ன?

திங்கள், 4 ஜூலை 2022 (14:37 IST)
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர் என கு.ப.கிருஷ்ணன் பேட்டி. 

 
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனிடையே முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளதாவது, ஈபிஎஸ், ஓபிஎஸ் மட்டுமேதான் அதிமுகவா? எம்.ஜி.ஆரின் உயில் படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர்.
 
இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரிபரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான் என தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

மருந்துகளில் QR Code!.. போலிகளை தடுக்க மத்திய அரசு அதிரடி!...

மராத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான்!.. ட்ரோலில் சிக்கிய ஆதவ் அர்ஜுனா...

எலான் மஸ்க்குக்கு அடுத்து இவர்தான்!. அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்!...

வெனிசுலா சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14000 கிமீ தள்ளி இருக்கும் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்..

மராத்தான் ஓட்டத்தில் முதல்வர்... 30 நிமிடங்கள் அசராமல் ஓடி அசத்திய விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments