தொடர்புடைய செய்திகள்
- G-Pay மூலம் 68.32 லட்சம்!.. வட்டாட்சியர் அலுவலகங்களில் சிக்கிய லஞ்சம்!...
- தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?.. தேர்தல் ஆணையம் பதில்!..
- லஞ்சம் வாங்கல!.. அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்து!. போடு!...
- அடியே என் பூந்தேனே...வெளியானது ஜனநாயகன் அடுத்த பாடல்
- மக்கள் தொகை கணக்கெடுப்பு சுய விவரங்களை பதிவு செய்தார் முதல்வர் விஜய்... பதிவு வைரல்..
திமுக, அதிமுக-வை தகர்த்து தூளாக்கிய விஜய் - வைகோ
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியல் களம் இதுவரை கண்டிராத புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தின் அசைக்க முடியாத ஆளுமைகளாக விளங்கிய பாரம்பரிய திராவிடக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களைக் கண்டித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,
கடந்த அரை நூற்றாண்டுகளாகத் தமிழக அரசியலை மாறி மாறி ஆட்சி செய்த, அசைக்க முடியாத வாக்கு வங்கிகளையும், வலுவான உட்கட்டமைப்புகளையும் கொண்ட கட்சிகள் திமுக மற்றும் அதிமுக. இந்த இரு மாபெரும் திராவிடக் கட்சிகளையும் யாரும் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவிற்கு மிகக் குறுகிய காலத்தில் தகர்த்து தூளாக்கிவிட்டு விஜய் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் என்று கூறினார்.
மேலும் புதிய அரசு பதவியேற்ற கடந்த 15 முதல் 20 நாட்களில், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது புதிய அமைச்சரவை மீது பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விஜய் அரசின் மீதான இந்தத் தாக்குதல்கள் எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமல்லாமல், தவெக-வின் கூட்டணிக்குள்ளே இருக்கும் சில உள்வட்டாரங்களில் இருந்தும், சில விவகாரங்களில் முரண்பாடான கருத்துக்களாக வெளிவருகிறது. ஒரு புதிய அரசு அமைந்து, அது தன் பணிகளை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பே, தினந்தோறும் ஏவுகணைகளைப் போலக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது நியாயமற்றது; இது திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கூறினார். .
இப்போது விஜய் அரசு மீது தினந்தோறும் ஏவுகணைகளையும், விஷப்பாணங்களையும் தொடுக்கும் இந்த அரசியல்வாதிகளும், விமர்சகர்களும், கடந்த திமுக ஆட்சியின் போது எங்கே போயிருந்தார்கள்? அப்போது ஏன் உங்கள் பாணங்கள் மௌனமாக இருந்தன? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
