1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (20:45 IST)

நான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு: திருவாரூர் கருணாநிதி வீட்டில் முதல்வர் குறிப்பு!

இன்று திருவாரூர் சென்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி வாழ்ந்த இல்லத்திற்குச் சென்று அவருடைய சிலைக்கு மாலை மரியாதை செய்தார். மேலும் கருணாநிதியின் பெற்றோர்கள் சிலைக்கு மரியாதை செய்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
கழக தலைவர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக முத்தமிழறிஞரின் திருக்குவளை இல்லத்துக்கு சென்றபோது, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு என்று கலைஞர் வழியில் குறிப்பெழுதினார். கலைஞர்-கழக தலைவர் வழியில் நாமும் கடமையாற்றுவோம்
 
முத்தமிழறிஞர் அவர்களுடைய திருக்குவளை இல்லத்தில் கலைஞரை ஈன்றெடுத்த முத்துவேலர் தாத்தா-அஞ்சுகம் பாட்டியின் சிலைகள்-கலைஞர்-அவரது மனசாட்சியான மறைந்த முரசொலி மாறன் அவர்களின் சிலைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் - குடும்பத்தாருடன் இணைந்து மரியாதை செய்தோம்.கலைஞர் வழியில் சமூகநீதி காப்போம்