1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk got three votes in nanguneri area

தேர்தலை புறக்கணித்த நாங்குநேரியில் விஜய்க்கு ஓட்டு!.. இது செம அப்டேட்!...

vijay
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் விஜய் சொன்னது போல ஒரு விசில் புரட்சியாகவே அமைந்துவிட்டது. புதிதாக கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 50 வருடங்களுக்கு மேல் அரசியல் செய்து வரும் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளை தோல்வியடைய செய்துவிட்டு ஆட்சியில் அமரவிருக்கிறது.

எம்ஜிஆரை விட அதிகமாக 35 சதவீத வாக்குகளை விஜய் பெற்றிருக்கிறார். தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் ஆளுநரிடமும் கோரிக்கையும் வைத்திருக்கிறார். அநேகமாக நாளை விஜய் ஆளுநரை சந்திப்பார் என தெரிகிறது. அதேபோல் விஜய் அவர் விரைவில் தமிழகத்தில் முதலமைச்சராக அவர் பதவி ஏற்கவிருக்கிறார்.

அதேநேரம் விஜய் தனது பலத்தை நிரூபிக்க இன்னும் 11 எம்எல்ஏ ஆதரவு தேவை. எனவே ஏற்கனவே வெற்றி பெற்ற சில அரசியல் கட்சிகளிடம் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. முதல் நிலை வாக்காளர்கள், முதல் பெரியவர்களை பலரும் விஜயின் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள். அதனால்தான் 108 தொகுதிகள் கிடைத்திருக்கிறது. குறிப்பாக இத்தனை வருடங்களாக அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்த பலரும் கூட இந்தமுறை விசில் சின்னத்திற்கு வாக்களித்ததால்தான் இந்த வெற்றி விஜய்க்கு கிடைத்திருக்கிறது..

இதில் ஆச்சரியம் என்னவெனில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே இரட்டை கொலைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த பெரும்பத்து கிராமத்தில் 969 வாக்காளர்களில் 5 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதில் மூன்று ஓட்டுக்கள் தவெகவுக்கும், எஞ்சிய 2 ஓட்டுகளில் ஒரு ஓட்டு காங்கிரசுக்கும், ஒரு ஓட்டு சுயேட்சைக்கு விழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
விஜய்க்கு ஆதரவு கிடைக்காவிட்டால் திமுக ஆட்சி அமைக்குமா?!.. ஒரு அலசல்!..