தொடர்புடைய செய்திகள்
- விடுதியிலிருந்து வெளியேறும் எம்.எல்.ஏ ; எடப்பாடி அணியில் இணைவாரா?
- நாங்க மொத்தம் 35 பேர் ; எங்களுக்கு பயம் கிடையாது : வெற்றிவேல் டெரர் பேட்டி
- ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் குரல்
- ஆட்சி கவிழ்ப்பா.? புதிய முதல்வரா? - என்ன செய்யப்போகிறார்கள் எம்.எல்.ஏக்கள்?
- துபாயில் பேரம் படிந்துவிட்டது ; இரு கம்பெனிகள் இணைகிறது - வெற்றிவேல் எம்.எல்.ஏ
நீதிமன்றத்திற்கு செல்வோம் - வெற்றிவேல் எம்.எல்.ஏ
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எங்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார் என வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைம்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன் தரப்பு வெற்றிவேல் எம்.எல்.ஏ “ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எங்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். கொறடாவின் உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும். இந்த நடவடிக்கை எதிராக நீதிமன்றம் செல்வோம்” என அவர் பேசினார்.
அடுத்த கட்டுரையில்
