1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC Group 2 Exam will be held on 21st May

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு மே 21 தேதி நடைபெறும்!- தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு திட்டமிட்டபடி வரும் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வின் போது, காலை 8:30 மணிக்கு தேர்வர்கள் வர வேண்டும் என்றும், தேர்வு   நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள்,333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது எனவும், ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், எதிர்காலத்தில் பயோமெட்ரிக் தேர்வில் பயோமெட்ரில் முறை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?