ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (16:40 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் அதிரடி திருப்பம்!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரியில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுவை தென்காசியில் எழுதியவர்கல் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்  என்றும், இந்த தேர்வு  மையத்தில் எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 
 
இருகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  தியாகராஜன் அவர்கள் தெரிவித்த போது தற்போது இந்த புகாரில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
தென்காசியில் தேர்வு எழுதிய பலர் மயிலாடுதுறை மாணவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை மட்டும் இன்றி தென்காசியில் தேர்வு எழுதிய பலரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran