தொடர்புடைய செய்திகள்
- மருத்துவமனையில் படுக்கை இல்லை; ஆம்புலன்ஸிலேயே 3 பேர் பலி – சென்னையில் சோகம்
- டெஸ்ட் தரவரிசை… அஸ்வின் மட்டுமே ஏறுமுகம்!
- லாக்டவுன் அறிவித்து மூன்றாவது நாளிலிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் !
- கடலூர் ரசாயண ஆலை விபத்து… 3 பேர் பலி; 20 பேர் காயம்!
- அவர்களே 25 லட்சம் கொடுத்தார்கள்… நீங்கள் ஒரு கோடி கொடுங்கள்… பாஜக தலைவர் எல் முருகன் வேண்டுகோள்!
ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதி படுக்கை! – தமிழக அரசு முடிவு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது
இந்நிலையில் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்பாடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒரு பேருந்தில் 10 படுக்கை வரை அமைக்க முடியும் என்பதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையை சரிசெய்ய இயலும் என கூறப்படுகிறது.
