வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 13 மே 2021 (11:15 IST)

கடலூர் ரசாயண ஆலை விபத்து… 3 பேர் பலி; 20 பேர் காயம்!

கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள ரசாயணத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு ரசாயணம் தயாரிக்கும் ஆலையில் இன்று காலை ஒரு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது 100க்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருந்த நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 ஆலையின் நிர்வாகக் குறைபாடே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.