1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மே 2021 (11:25 IST)

மருத்துவமனையில் படுக்கை இல்லை; ஆம்புலன்ஸிலேயே 3 பேர் பலி – சென்னையில் சோகம்

சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இட பற்றாக்குறையால் பல கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது. அவ்வாறாக ஆம்புலன்ஸிலேயே காக்க வைக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.