புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (10:32 IST)

விஜய்க்கு சி.எம். ஆகணும்!.. மக்களை பத்திலாம் கவலை இல்லை!.. திமுக பதிலடி!...

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தவெக மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய போது அதிமுக, திமுக இரண்டையும் கடுமையாக விமர்சித்தார்.. அதிமுகவை ஊழல் அடிமை கட்சி என்றும் திமுகவை தீய சக்தி என்றும் விமர்சித்தார்.. மேலும் ஒரு டபுள் என்ஜின் ஒரு டப்பா என்ஜின்.. இது இரண்டையும் விட தவெகதான் டாப் என்ஜின் என்றும் பேசியிருந்தார்..

மேலும், முதல்வர் ஸ்டாலின் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரை எழுப்பி ‘நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்று கேட்டால் விசில் சின்னத்துக்கு என்றுதான் சொல்வார் என்றெல்லாம் பேசி தெறிக்கவிட்டார்.. மேலும் திருவள்ளுவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் ‘அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என குரள் எழுதியிருப்பார் என்றெல்லாம் கலாய்த்தார்..

இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ‘விஜய் என்றைக்காவது மக்கள் பிரச்சினையை பேசுகின்றாரா? மக்கள் பிரச்சினைக்காக போராடி இருக்கிறாரா? முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணம். வீட்டிற்கு ஒரு ஓட்டு எங்களுக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்.. அப்படி கணக்கு பார்த்தால் இரண்டரை கோடி வாக்குகள் பெற வேண்டும்.. இதை எண்ணிப் பார்த்தாலே விஜய்க்கு எவ்வளவு பேராசை என்பது தெரிய வரும்’ என்று சொல்லியிருக்கிறார்..