1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (10:57 IST)

ஓஹோன்னு பேமஸ் ஆன ஆசிரியர் பகவானின் பணியிடை மாற்றம் ரத்து

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் பகவானின் பணியிடை மாற்று உத்தரவை ரத்து செய்துதுள்ளனர்.
திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான். ஆசிரியரைத் தாண்டி மாணவர்களுடன் நண்பரைப்போல் பழகியதால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இவர்மீது அதீத பிரியம்.
 
இந்நிலையில், அவருக்கு பணியிட  மாறுதல் கிடைத்தது. அதற்கான ஆர்டரை பெற அவர் பள்ளிக்கு சென்ற போது மாணவர்கள் பள்ளியை விட்டுப் போகாதீர்கள் சார்.. என அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பிரபலமாகி பலர் பகவானை பாராட்டி வருகின்றனர்.
மாணவர்களின் இந்த பாசப்போராட்டத்தால் அவரின் பணியிட மாறுதல் உத்தரவு 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கல்வித்துறை ஆசிரியர் பகவானை வெளியகரம் பள்ளியிலே தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிடை மாற்றம் ரத்து செய்யப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.