தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் எந்தெந்த பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு
- விநாயகர் சிலை வழிபாட்டில் நடனம் ஆடிய நபர் திடீர் உயிரிழப்பு.. கதறி துடிக்கும் கர்ப்பிணி மனைவி..!
- ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் விநாயகர் சதுர்த்தி போட்டோஷூட்!
- அம்பானியின் விநாயகர் சதுர்த்தி விழாவில் அட்லி, நயன்தாரா குடும்பத்தினர்.. வைரல் புகைப்படங்கள்..!
- உதயநிதியின் புகைப்படத்தை மிதித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு..!
நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அதிரடி உத்தரவு..!
விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதை அடுத்து நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று அதன்பின் சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபரீதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் மற்றும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை நாளை அதாவது செப்டம்பர் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
