தொடர்புடைய செய்திகள்
- இது முதல் வெற்றிதான்; 50% இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும்! – டெல்லியில் டி.ஆர்.பாலு!
- இதுக்குமேல ஸ்டெர்லைட்ல ஆக்ஸிஜன் உற்பத்தி அவசியமில்லை – தமிழக அரசு வாதம்!
- 700 ரூபாய் கொடுத்தால் வருடம் முழுவதும் முட்டை? – மோசடியை தடுத்த போலீஸ்!
- தேஜாவு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த அருள்நிதி!
- சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை!!
ஆகஸ்ட் 3 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 3 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல ஆகஸ்ட் 1,2,3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். அதோடு சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
