தொடர்புடைய செய்திகள்
- தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!
- பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!
- 10ஆம் வகுப்புக்கு இனி இரண்டு பொதுத்தேர்வு: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு..!
- காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!
இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு 9.13 லட்சம் மாணவர்கள் தோற்றவிருக்கின்றனர்.
இந்த ஆண்டில், 12,480 பள்ளிகளில் பயிலும் 4,46,411 மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272 சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் என மொத்தம் 9,13,036 பேர் எழுத உள்ளனர். இவர்களில் 15,729 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் கட்டுப்பாட்டிற்குள் நடைபெற வேண்டும் என்பதற்காக 48,426 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 4,858 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் சிரமமின்றி எழுதுவதற்காக காற்றோட்டமான அறைகள், குடிநீர், கழிப்பறைகள், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
Edited by Siva
