1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (19:26 IST)

தி நகரில் தீபாவளி பர்ச்சேஸ்: காற்றில் பறக்கவிடப்பட்ட விதிமுறைகள்

தீபாவளி இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளிக்கு புத்தாடை எடுப்பதற்காக சென்னை தி நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய தினம் ஞாயிறு விடுமுறை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது என்பதும் பல ஜவுளிக்கடைகளில் கொரோனா விதிமுறைகளை மறந்து வாடிக்கையாளர்களை கடைக்காரர்கள் அனுமதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ள நிலையில் எந்த கடையும் இந்த நிபந்தனையை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததை அடுத்து திநகரில் உள்ள காவல்துறையினர் பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இவ்வாறு விதிமுறைகளை
 மீறினால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.