1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (09:36 IST)

போராட்டமே சட்டத்தை திரும்ப பெற வைக்கும்; ஸ்டாலின் கடிதம்

போராட்டம் மூலமே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வைக்கமுடியும் என கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் பாஜக அரசை கண்டித்தும் வருகிற 23 ஆம் தேதி, மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் கட்சிகளுக்கும் சங்கங்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றிற்கு முரணான வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் வருகிற 23 ஆம் தேதி, சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி, ஜாதி, மதம் ஆகிய எல்லைகளை கடந்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இந்த சட்டத்தை திருமப பெற முடியும்” என முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.