தொடர்புடைய செய்திகள்
- மெட்ரோ பணிகள் எதிரொலி.. சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!
- அந்த பக்கம் போலீஸ் புடிக்கிறாங்க! கூகிள் மேப்பில் குறித்து வைத்த இளைஞர்! - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொன்ன யோசனை!
- சென்னையில் தனியார் மினி பேருந்துகள்: போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எதிர்ப்பு..!
- பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.! போக்குவரத்து துறை அறிவுறுத்தல்.!
- 100 மின்சார பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும்- போக்குவரத்து துறை அமைச்சர்!
வார விடுமுறை காரணமாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு..!
சனி ஞாயிறு வார விடுமுறை அடுத்து சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
வார விடுமுறையை ஒட்டி இன்று முதல் 28ஆம் தேதி வரை சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, கோவை, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 260 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும் நாளை 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய நகரங்களுக்கு இன்றும் நாளையும் 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் திருப்பூர் கோவை பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், போக்குவரத்து துறையின் மொபைல் செயலின் மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
