1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Southern railway start another train services

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் செயல்படும்! – ரயில்வே அறிவிப்பு!

Southern Railway
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் சிலவற்றை மீண்டும் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருசில சிறப்பு ரயில்கள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருப்பதி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை-நெல்லூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்டிரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மேலும் சில ரயில்களும், முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஏப்ரல் 1 முதல் செயல்பட உள்ளன்.
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?