1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sekar babu explain about temple opening

பாஜகவினால் திறக்கல.. மக்களுக்காகதான்..! – கோவில் திறப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு!

Tamilnadu
தமிழகத்தில் கோவில்களை வார இறுதி நாட்களிலும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவில்களை எல்லா நாளும் திறந்து வைக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு இனி கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களும் உட்பட வார நாட்கள் முழுவதும் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “பாஜகவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கோவில்கள் திறக்கப்படவில்லை. மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தே கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
16 ஆயிரமாக பதிவான தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!