தொடர்புடைய செய்திகள்
- சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரருக்கு ஒருமாத விடுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
- அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது.! சின்னம் தொடர்பான விவகாரத்தில் தான் தலையிட முடியும்.! தேர்தல் ஆணையம்..!!
- வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்கு சிறை!
- இந்து முன்னணியை பார்த்து போலீசாரே அஞ்சும் நிலை..! ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.!! நீதிமன்றம் கருத்து..!!
- இப்படியா தேர்தல் நடத்துவது? சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு கடும் கண்டனம்
நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை உடைக்கவிடமாட்டேன்: சீமான்
நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை உடைக்கவிடமாட்டேன் என சீமான் பேட்டியளித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் மாநகர், அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில், அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்காக சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துகிறார்கள். என்ஐஏ சோதனைக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம்
நாம் தமிழர் கட்சியை ஒரு போதும் உடைக்க முடியாது, நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சிய உடைக்கவிடமாட்டேன் என ஆவேசமாக தெரிவித்தார்.
Edited by Mahendran
