தொடர்புடைய செய்திகள்
- அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது.! சின்னம் தொடர்பான விவகாரத்தில் தான் தலையிட முடியும்.! தேர்தல் ஆணையம்..!!
- வானவில் நிறத்தில் கம்மல் அணிந்த பெண்ணுக்கு சிறை!
- இந்து முன்னணியை பார்த்து போலீசாரே அஞ்சும் நிலை..! ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.!! நீதிமன்றம் கருத்து..!!
- இப்படியா தேர்தல் நடத்துவது? சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு கடும் கண்டனம்
- ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு! – சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்!
சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரருக்கு ஒருமாத விடுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒருமாத விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவரது சகோதரர் மோகனும் கைது செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது
இந்த நிலையில் 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரியும், இடைக்காலமாக அவருக்கு 3 மாத விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்
இந்த நிலையில் ஒரு மாதம் விடுப்பு வழங்க அரசுத்தரப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் ஒரு மாதம் விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வாரம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
