1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman ask question to dmk govt

தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? சீமான் கேள்வி

Seeman
தனியாருக்கு தாரை வார்ப்பது தான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழக அரசின் போக்குவரத்து துறை தனியாருக்குத் தாரை வார்க்க இருப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
 
ஏற்கனவே இது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து கூறிய நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் கருத்து கூறியுள்ளார் 
 
பாஜக அரசைப் போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது தான் திராவிட மாடலா?   என தமிழ்நாடு அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார் 
 
மேலும் அரசு பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்…போலீஸார் அதிர்ச்சி