தொடர்புடைய செய்திகள்
- ஒரே மாதத்தில் 3 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை! – கல்வித்துறையின் சூப்பர் நடவடிக்கை!
- தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு.. சந்துருவின் பதவிக்காலம் நீட்டிப்பு
- ஆசிரியரை செருப்பால் அடித்து ஓட ஓட விரட்டிய மாணவர்கள்.. என்ன காரணம்?
- ஆசிரியரை கல்லால் அடித்து விரட்டிய மாணவர்கள்..என்ன நடந்தது?
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! 9.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!
அறிவியல் பாட தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம்.. 10ஆம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி..!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற அறிவியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத பல வினாக்கள் வினாத்தாளில் இருந்ததாகவும் வழக்கமாக இடம்பெறும் கேள்விகள் 25 சதவீதம் கூட வினாத்தாளில் இல்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
ஆசிரியர்கள் கூறிய முக்கியமான கேள்விகள் ஒன்று கூட வரவில்லை என்றும் ஒரு மதிப்பெண் கேள்விகள் கூட புதிய வடிவில் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாகவும் அதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட பதில் அளிக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது
மேலும் இந்த முறை அறிவியல் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஆசிரியர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மற்ற பாடங்களை ஒப்பிடும்போது அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக ஆசிரியர்களே கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
