தொடர்புடைய செய்திகள்
- சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு.. சாதிக்குமா ருத்ராஜ் டீம்..!
- ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்
- தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா..?- எல். முருகன்
- கோவை பிரதமர் ரோட் ஷோவில் பள்ளி குழந்தைகள்; கடும் நடவடிக்கை வேண்டாம் - உயர்நீதிமன்றம்
- ஆசிரியரை கல்லால் அடித்து விரட்டிய மாணவர்கள்..என்ன நடந்தது?
தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு.. சந்துருவின் பதவிக்காலம் நீட்டிப்பு
தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலியாக, சந்துரு தலைமையில் குழு தமிழக அரசு அமைத்தது. இந்த குழு பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறது.
ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவின் இந்த குழு பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த குழுவின் கால நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து முழு ஆய்வு செய்து வரும் மே 31ஆம் தேதிக்குள் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்பது குறிப்பிட்த்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
