தொடர்புடைய செய்திகள்
- வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ட்விட்..!
- மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..! எதற்காக தெரியுமா..?
- நீட் தேர்வு.. தமிழகத்தில் மட்டும் 1.55 மாணவர்கள் விண்ணப்பம்..!
- மதரஸா பள்ளிகள் சட்டம் 2004 செல்லாது-அலகாபாத் உயர் நீதிமன்றம்
- ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! 9.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!
தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக மற்றும் புதுவையில் சமீபத்தில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது என்பது இதையடுத்து இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தனித் தேர்வர்கள் 28 ஆயிரம் பேரும், 235 சிறைக் கைதிகளும் அடங்குவர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
இன்று தொடங்கும் 10ம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் பொது தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 48,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
மேலும் தேர்வு மையங்களில் முறைகேடு செய்யும் மாணவர்களையும் பிடிப்பதற்காக 4 ஆயிரத்து 591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
