1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:04 IST)

4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை: மாணவர்கள் குஷி!

உள்ளாட்சித் தேர்தலுக்காக நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. அதேசமயம் மற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பகுதிகளில் இடைதேர்தலும் நடத்தப்படுகிறது.
 
இந்நிலையில் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 9 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இதனைத்தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.