தொடர்புடைய செய்திகள்
- கொரோனா குறைந்தாலும், சர்க்கரை குறையவில்லை: சசிகலா ஹெல்த் அப்டெட்!
- சசிகலா குணமடைந்து தமிழகம் வரவேண்டும் – அதிமுக அமைச்சர் பிராத்தனை!
- சசிக்கலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும்! – பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
- முதல்வர் டெல்லி பயணத்திற்கும் சசிகலா உடல் நலமின்மைக்கும் தொடர்பு? சீமான் சந்தேகம்!
- சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று...!
சசிகலா சென்னை வருவது எப்போது??
சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலை ஆக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சசிகலாவின் உடல்நலக் குறைவு பலவிதமான சந்தேகங்களை எழிப்பியுள்ளது.
இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், பெங்களூரு சிறையில் இருந்து நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா நினைவு நாளான 3 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
