1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sangeetha vijay asking to do the enquiry today

இன்னைக்கு முடியாது!.. விஜய் கோரிக்கை.. இன்னைக்கே நடத்துங்க!.. சங்கீதா கோரிக்கை!...

sangeetha vijay
முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியான இன்று வழக்கு நடைபெறவிருக்கிறது. ஆனால் சட்டப்பேரவை நிகழ்வுகள் இருப்பதால் இன்று என்னால் கலந்து கொள்ள முடியாது என விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் காணொளி மூலம் ஆஜரான சங்கீதாவோ இன்றே விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது,

இதையடுத்து, விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் சட்டசபை நிகழ்வுகளை முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவரும் காணொளி மூலம் இந்த விசாரணையில் ஆஜரானால் இன்றே இந்த வழக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முன்னபின்னே பேப்பர் படித்திருந்தா தெரிஞ்சிருக்கும்.. சட்டசபையில் உதயநிதியை கலாய்த்த முதல்வர் விஜய்..