1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind why cm vijay going to meet modi

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். மேலும் விஜய் முதல்வரானது முதலே அதிரடி அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவருகிறது. விரைவில் அவர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்த

modi vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். மேலும் விஜய் முதல்வரானது முதலே அதிரடி அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவருகிறது. விரைவில் அவர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா காந்தி உள்ளிட்ட சிலரையும் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். ஏற்கனவே மோடியிடம் இதற்காக நேரம் கேட்கப்பட்டது. ஆனால் மோடி வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால் நேரம் ஒதுக்க முடியவில்லை. எப்படியும் இந்த மாத இறுதிக்குள் தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கு செல்வார் என தெரிகிறது..

சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பது தனக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பது அவருக்கு புரிய வந்திருக்கிறது. அதோடு, நிதி பிரச்சனையை சமாளிக்க மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதே ஒரே வழி என உயர் அதிகாரிகள் தெரிவிக், விஜயோ ‘மத்திய அரசின் உதவியில்லாமல் இந்த நிதி பிரச்சனை தீர்க்க முடியாதா?’ என கேட்டிருக்கிறார்.

அதற்கு தற்போது நாம் 2026-27 வருடத்திற்கான பட்ஜெட்டை தயாரிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.. எனவே குறுகிய காலத்தில் ஒரு மாற்று வழியை கண்டறிந்து நிதியை திரட்டி நிதி நெருக்கடியை சமாளிப்பது சுலபம் இல்லை. எனவே மத்திய அரசிடம் நிதியை பெறுவதே சரியான வழி என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.. இதை விஜயும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

தமிழ்நாட்டின் நிதி பிரச்சனையை எடுத்துரைத்து நிதியை பெறும் முயற்சியில் விஜய் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தனது கொள்கையை எதிரி என்று விஜய் கூறினார். ஆனாலும் தமிழ்நாட்டு மாநில உரிமையை விட்டுக் கொடுக்காமல் தமிழக பிரச்சனைகளை பிரதமரிடம் விளக்கமாக சொல்லி அவர் தேவையான நிதியை பெறுவார் என்கிற நம்பிக்கையில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.