1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajendra Balaji will be arrested within two days

இன்றோ அல்லது நாளையோ ராஜேந்திர பாலாஜி கைது?

Rajendra Balaji
ரூ. 3 கோடி மோசடி செய்த ராஜேந்திர பாலாஜியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து அவர் திடீரென தலைமறைவானார் என்பதும், அவரை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
 
கடந்த 17 ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 11 நாட்களாக தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது 6 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சாதாரண பட்டன் கைப்பேசியை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தி வருகிறார். எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
தற்போது அவர் பதுங்கியுள்ள இடத்தை நெருங்கியுள்ளோம். இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தங்கத்தின் விலை குறைவு…மக்கள் மகிழ்ச்சி