1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (07:30 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை என் தாக்கம் தமிழகத்திலும் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த 27 மாவட்டங்கள் பின்வருமாறு: 
 
சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் 
 
Edited by Siva