1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (22:40 IST)

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் உள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் சில இடங்களில் நாளை கனமழையும் அக்டோப்டர் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.