தொடர்புடைய செய்திகள்
- கட்டுப்பாடுகளை பின்பற்ற முதல்வர் அறிவுறுத்தனும்... ஓ.பி.எஸ் கோரிக்கை
- ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்கிய சசிகலா!
- கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் வருமா? அதிபரின் பேச்சால் பரபரப்பு!
- 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!
- ஆர்யன்கானை விடுவிக்க கோடிக்கணக்கில் பணபேரமா? பெரும் பரபரப்பு
கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை
வடகிழக்கு பருவமழைகான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழைகான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
