காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை அறிவிப்பு..!
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியில் உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 19, 2024
