1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (11:33 IST)

மேலும் நீட்டிக்கப்படுகிறது கொரோனா ஊரடங்கு! – புதுச்சேரி அரசு!

கொரோனா பரவல் காரணமாக கொரோனா ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பட்டுள்ளன.

இன்றுடன் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்கை மேலும் செப்டம்பர் 15 வரை நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.