1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Public not allowed to Tiruvannamalai

தீபத் திருவிழா: பக்தர்களுக்கு இந்த ஆண்டும் அனுமதி மறுப்பு!

Tiruvannamalai
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத் திருவிழாவிற்கு யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10 ஆம் தேதி (புதன்கிழமை) விடியற் காலை 06.30 மணிக்கு மேல் 07.25 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
 
இதனை தொடர்ந்து உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 10 ஆம் நாள் திருவிழா விடியற்காலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
 
மகா தீபத் திருவிழாவில் பக்தற்களுக்கு கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  இதே போல இம்முறையும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே அனுமதி வழங்கப்படவில்லை. 
 
கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்வுகள் அனைத்து தொலைக்காட்சிகள், உள்ளுர் கேபிள் டிவிக்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் திருக்கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜம்மு - காஷ்மீரில் 1000 பேருக்கு டெங்கு