1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Order to close Tasmac shops in Erode East block

ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

மாவட்ட  ஆட்சியர்  உத்தரவு
ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விடுமுறை என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2 ஆம் தேதியும், வாக்கு எண்ணும் பகுதிகளைச்  சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூட  மாவட்ட  ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
67.95 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!