தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? காங்., தலைவர் கேள்வி
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு..!
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை- டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
- இவருக்குதான் எங்க முழு ஆதரவு.. ஒருவழியாக அறிவித்த பாஜக!
- தக்க பாடம் புகட்ட ஈரோடு இடைத்தேர்தலில் களம் காணுவோம்- முகிலன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 41 மனுக்கள் நிராகரிப்பு என தகவல்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேட்பமான தாக்கலுக்கான தேதி முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்பாளர்களில் 80 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட 41 மனுக்களும் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
