1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS going to vote in president election

ஓட்டுப்போட வந்த ஓபிஎஸ்.. ஓட்டு போடாமல் திரும்பினார்! – என்ன காரணம்?

OPS
குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஓட்டு போட சென்ற ஓபிஎஸ் பாதி வழியிலேயே திரும்ப சென்றார்.

இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பல  எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும் அரசு தலைமையகம் விரைந்தார்.

ஆனால் கொரோனா தொற்று உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, போர் நினைவு சின்னம் வரை சென்ற ஓபிஎஸ் வாக்களிக்காமல் திரும்ப சென்றார்.
அடுத்த கட்டுரையில்
தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்: சென்னையில் பரபரப்பு