தொடர்புடைய செய்திகள்
- எழுத்தாளர் கோணங்கிக்கு தமிழ்நாடு அரசின் ‘இலக்கிய மாமணி’ விருது!
- ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன்: ராயப்பேட்டை காவல் நிலையம் அதிரடி
- டிஸ்சார்ஜ் ஆனதுமே வாக்களிக்க செல்லும் முதல்வர்! – இன்று குடியரசு தலைவர் தேர்தல்!
- சிவன் கோவிலுக்குள் வீசப்பட்ட இறைச்சி..! – உ.பியில் இறைச்சி கடைகள் தீ வைப்பு!
- இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்வா?
ஓட்டுப்போட வந்த ஓபிஎஸ்.. ஓட்டு போடாமல் திரும்பினார்! – என்ன காரணம்?
குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஓட்டு போட சென்ற ஓபிஎஸ் பாதி வழியிலேயே திரும்ப சென்றார்.
இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அரசு தலைமையகத்தில் இன்று குடியரசு தலைவர் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும் அரசு தலைமையகம் விரைந்தார்.
ஆனால் கொரோனா தொற்று உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பிபிஇ கிட் அணிந்து வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, போர் நினைவு சின்னம் வரை சென்ற ஓபிஎஸ் வாக்களிக்காமல் திரும்ப சென்றார்.
அடுத்த கட்டுரையில்
