தொடர்புடைய செய்திகள்
- ரெனால்ட் ஆலை மூடப்படுவது ஓபிஎஸ் கற்பனை! – அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
- ஜெயலலிதா மர்ம மரணம்: ஆறுமுகச்சாமி கமிஷனின் விசாரணை முடிந்தது!
- சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிக்கும் பிரபலம்: ஈபிஎஸ் உடன்படுவாரா?
- 'உட்காருடா..' என்று சொன்ன திமுக அமைச்சர்? ஓ.பி.எஸ் & அதிமுகவினர் வெளிநடப்பு
- இந்த பக்கம் இந்தி எதிர்ப்பு; அந்த பக்கம் பப்ளிசிட்டி! – மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்!
ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ்-ஈபிஎஸ்
பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
அந்த அறிக்கையில் பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை கிடைத்த வெற்றி என்றும் அதிமுக அரசின் முயற்சிகளினால் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்றும் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
