1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (15:11 IST)

ராணுவ வீரர்கள் இறப்பு; ஊட்டியில் நாளை முழு கடையடைப்பு!

குன்னூரில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் நாளை முழு கடையடைப்பு ஊட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி அருகே குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று 13 ராணுவ வீரர்கள் உடலும் சூலூர் விமானப்படை தளம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து டெல்லி புறப்படுகிறது.

இந்நிலையில் 13 ராணுவ வீரர்களின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விபத்து நடந்த உதகமண்டலம் பகுதியில் நாளை கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் முழு கடையடைப்பு அறிவித்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த கடைகளும், ஓட்டல்களும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.