தொடர்புடைய செய்திகள்
- இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!
- சீமான் இதை நிறுத்தலைனா கடும் விளைவுகளை சந்திப்பார்! - தமிழீழ போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
- சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெயர் சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.. சீமான்
- ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு கோமியம் அனுப்பி போராட்டம்.. திராவிட தமிழர் கட்சியினர் அதிரடி..!
- ”டேய் சங்ககிரி ராஜ்குமார்.. நீ எந்த ஊருடா?” போனில் மிரட்டும் நாதக தொண்டர்கள்! - சீமான் போட்டோஷாப் விவகாரம்!
திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள்: சீமான்
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் திராவிடர்களுக்கு ஒரே ஒரு பெரியார் தான் என்றும் ஆனால் தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள் என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசி வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில் சீமான் குறித்த பல உண்மைகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக அவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்றும், விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றது உண்மை இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான் திராவிடர்களுக்கு ஒரே ஒரு பெரியார் தான் என்றும் ஆனால் தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். ஈரோடு கிழக்கில் எங்களுக்கு வாக்களித்து நம்பிக்கையோடு ஒரு அடி எடுத்து வையுங்கள், மாபெரும் அரசியல் புரட்சிக்கான காலடித்தடம் ஈரோடு கிழக்கிலிருந்து தொடங்கப்படும் இந்த வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றியாக கருதி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை என்றும் சொத்துவரி, மின்கட்டண உயர்வு பற்றி திமுக தேர்தல் அறிக்கை சொல்லவில்லை, மேலும் சாராய விற்பனையை தவிர திமுக அரசுக்கு வருவாய் தரும் மாற்று திட்டம் இல்லை என்றும் அவர் கடுமையாக திமுக அரசை விமர்சனம் செய்தார்.
Edited by Mahendran
