தொடர்புடைய செய்திகள்
- Work From Homeனு சொல்லிட்டு இழுத்து மூடிய கம்பெனி! ஓவர் நைட்டில் வேலை இழந்த 2000 ஊழியர்கள்!
- இதுவரை எந்த இந்தியரும் படைக்காத இமாலய சாதனையைப் படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப்!
- சென்னை உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. பெரும் பரபரப்பு..!
- சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!
- அண்ணா பல்கலை மாணவி மீதே பழி சுமத்தும் உணர்ச்சியற்ற எப்.ஐ.ஆர்.. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு.. சென்னையில் ஒருவர் கைது.. என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை..!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரண்டு நகரங்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் சற்றுமுன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஒருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஐஏஎஸ் ஐ எஸ் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் என்ற நிலையில் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு அந்த இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சென்னையில் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்த அல்பாசிக் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் என்றும் கடந்த எட்டு மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருந்து வரும் இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது .
என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அல்பாசிக் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
