வேட்பாளர் யாருக்கு சொந்தம்! ஒற்றை வேட்பாளரால் பாஜக – திமுக குழப்பம்!

புதன், 2 பிப்ரவரி 2022 (15:24 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக, திமுக கட்சி சார்பில் ஒரு பகுதியில் ஒரே வேட்பாளரின் பெயர் வெளியாகியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ஆறுமுகநேரி பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டிருந்தது. அதில் 4வது வார்டு வேட்பாளராக ரேணுகாதேவி என்பவர் பெயர் இடம் பெற்றிருந்தது. அதேசமயம் பாஜக சார்பில் ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அதே 4வது வார்டில் அதே ரேணுகா தேவியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஒரே வேட்பாளரை இரு கட்சிகள் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக, பாஜக தரப்பினர் அளித்த விளக்கத்தில் ரேணுகாதேவி முன்னதாக பாஜகவில் இருந்தவர் என்பதும் சமீபத்தில்தான் திமுகவில் இணைந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவுக்கு வேறு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சர்ச்சை: முதல்வர் விஜய் புகைப்படம் வைக்க மேயர் மறுப்பு

பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதம்: நார்வே செய்தியாளரின் சமூக ஊடக கணக்குகள் முடக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் .. 1,931 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை

மின்சார வாரியத்தில் 2.5 லட்சம் கோடி கடன்!.. பல முறைகேடுகள்!. சி.டி.நிர்மல் குமார் பேட்டி..

கிறிஸ்துவ ஓட்டு வேணும்னா ஜோசப் விஜய்!.. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments