தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..
- காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!
- மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? தஞ்சை ஆட்சியர் கேள்வி..!
- அதிகாலை முதல் சாரல் மழை..! குளிர்ச்சியான சூழலுக்கு மாறிய கோவை..!!
- 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை.!!
தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை.. இனி வறண்ட வானிலை தான்..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவ மழை பெய்தது என்பதும் மிக்ஜாம் புயல் ஏற்பட்டு சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்தது என்பதும் தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புயல், கனமழை, வெள்ளம் ஆகியவற்றை கொண்டு வந்த வடகிழக்கு பருவமழை தற்போது ஜூன் 13ஆம் தேதி நிறைவடைவதாகவும் இனி வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ: நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் போட்டியா? எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்? அவரே அளித்த பேட்டி..!
இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் 13 ஆம் தேதி முதல் வறண்ட வானிலை நிலவும் என்றும் கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பதிவாகவில்லை என்றும் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாகவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கேரள கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
