1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Murugan and Nalini hungerfast protest ends

வேலூர் சிறையில் முருகன், நளினி ஆகியோரின் உண்ணாவிரதம் வாபஸ்!

முருகன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் போராடி வரும் நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி முருகன், நளினி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

முருகன் கடந்த 12 நாட்களாகவும், நளினி 7 நாட்களாகவும் உண்ணாவிரதம் இருந்த நிலையில் தற்போது இருவரும் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். சிறைத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை நளினி, முருகன் ஆகிய இருவரும் வாபஸ் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர்களை தேர்தல் அறிவிப்புக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக கவர்னருக்கு இதுகுறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன
அடுத்த கட்டுரையில்
தீவிரவாதத்தை ஆதரிக்கும் இந்தியர்களை சுட்டுத்தள்ளுங்கள்: ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய வீரர் ஆவேசம்